தமிழகம் முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் 69-வது குருபூஜை நினைவு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் இமானுவேல் சேகரனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் குறிஞ்சி முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு இமானுவேல் சேகரனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்தி நடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

