சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா
செய்திகள்

41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா

🕒 7 செப்., 2026, 04:45 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா

AI Highlights

  • 41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில், 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 08-ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக, செப்டம்பர் 05-ஆம் தேதி நிறைவுவிழா நடைபெற்றது. உலகம் முழுவதும் சுமார் 4 கோடி மக்கள் பார்வையிழந்த நிலையில் உள்ளனர். இதில் சுமார் 3.5 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவில் சுமார் 12 லட்சம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்துள்ளனர். இதே நிலை நீடித்தால், 2027-ஆம் ஆண்டில் கருவிழி நோயினால் பார்வையை இழப்போரின் எண்ணிக்கை 1.06 கோடியாக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவிழி பாதிப்பினால் ஏற்படும் பார்வையிழப்பைத் தடுக்க ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் கருவிழிகள் தேவைப்படுகின்றன. இதனை வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள கண் வங்கிகள் மற்றும் கண் மருத்துவமனைகள் சார்பில் தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார நிகழ்வுகள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி இணைந்து நடத்தும் இந்த விழாவின் தொடக்க நிகழ்வாக, ஆகஸ்ட் 25-ஆம் தேதி கண்தான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினர்களாக திருநெல்வேலி மாவட்ட மாவட்ட நீதிபதியும், போக்சோ சட்ட சிறப்பு நீதிபதியுமான கே.சுரேஷ்குமார், திருநெல்வேலி மாவட்ட கூடுதல் சார்பு நீதிபதி எஸ்.கல்யாண மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்திய மருத்துவ சங்கம் - திருநெல்வேலி கிளைத் தலைவர் டாக்டர் எம். முகம்மது அபூபக்கர், காவேரி மருத்துவமனை திருநெல்வேலி மருத்துவ நிர்வாகத் தலைவர் டாக்டர் லட்சுமணன், பீஸ் ஹெல்த் மருத்துவமனை திருநெல்வேலி மருத்துவ இயக்குநர் டாக்டர் அன்புராஜன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கண்தான விழிப்புணர்வு வாசகங்களை கூறி நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவியர்கள், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே கண்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாணவ, மாணவியர்களிடையே கண்தானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. திருநெல்வேலி மாநகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் கண்தானம் தொடர்பான மருத்துவச் சூழலில், இறந்தவர்களிடமிருந்து கருவிழியை மருத்துவமனைகளில் இருந்து பெறுவதற்கான கண்தானம் குறித்த சிறப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டன. 05-ஆம் தேதி இன்று நடைபெற்ற நிறைவு விழாவில், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் ராணி லட்சுமி வரவேற்புரையாற்றினார். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் D. லயனல்ராஜ் சிறப்புரையாற்றினார்.அவர், கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆற்றிய சாதனைகள், கண்தானத்தின் பயன்கள் மற்றும் அதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார். சிறப்பு விருந்தினர்களாக ராபர்ட் ப்ரூஸ் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் லெப்டினன்ட் A.R சைதன்யா INS கட்டபொம்மன் தெற்கு விஜயநாராயணம் கண்தானம் செய்த குடும்பத்தினர், கண்தானம் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் இயக்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கண்தான இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை டாக்டர் அபினயா தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கருவிழிப்பிரிவு மருத்துவர் டாக்டர் ராணி லட்சுமி, மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். நிறைவில் டாக்டர் சுஜிதா நன்றியுரை வழங்கினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔