விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்த தனியார் தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவரது மூத்த மகன் ரோகித் (7) தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்.இன்று காலை பள்ளி செல்வதற்காக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்களை ஏற்றி செல்ல வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில், சிறுவன் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தான். சிறுவன் உடலை மீட்ட தெற்கு காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் பேருந்து ஓட்டுநர் மம்சாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
பேருந்து விபத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்!
🕒 11 செப்., 2026, 09:51 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •ராஜபாளையத்தில் பள்ளிக்கு நடந்து சென்ற 7 வயது 2-ம் வகுப்பு மாணவன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
