சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/ரயிலில் 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா வாலிபர் கைது
செய்திகள்

ரயிலில் 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா வாலிபர் கைது

🕒 30 ஆக., 2026, 06:34 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ரயிலில் 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா வாலிபர் கைது

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் ரயில் நிலையத்தில், ரயிலில் கடத்தி வரப்பட்ட 9.5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த வாலிபரைக் கைது செய்தனர். விருதுநகர் ரயில்வே போலீசார், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு ரயில் நிலையத்திலும் ரயில்களிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மேற்கு வங்க மாநிலம் புருலியாவிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற ரயிலில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒருவரின் பையைச் சோதித்ததில், அதில் 9.5 கிலோ கஞ்சா ஒளித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிக்குபிரதம் (23) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த ரயில்வே போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட 9.5 கிலோ கஞ்சாவை மேலதிக விசாரணைக்காக ராமநாதபுரம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔