விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய வளாகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு மற்றும் சுகாதாரத் துறை அலுவலகப் பகுதிகளில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்பகுதியில் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரியும் குரங்குகளின் அச்சுறுத்தல் காரணமாக, இங்கு பணிபுரியும் அரசு ஊழியர்களும் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்லும் பொதுமக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர். குரங்குகளின் நடமாட்டத்தால், குறிப்பாகப் பெண் அலுவலர்கள் அலுவலகக் கட்டிடங்களை விட்டு வெளியே வரத் தயங்கும் சூழல் நிலவுகிறது.
எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழும் முன், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வளாகத்திற்குள் உலா வரும் குரங்குகளைப் பிடித்துப் பாதுகாப்பான வனப்பகுதியில் விட வேண்டும் என அரசு ஊழியர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

