மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, Cockroach Janta Party (CJP) நிறுவனரான அபிஜித் திப்கே (Abhijeet Dipke), இது மாணவர் போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றி எனக் குறிப்பிட்டு, “நாம் சாதித்துவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஆதரவாளர்களிடம் பேசிய அவர், “இது ஜனநாயகத்தின் வெற்றி. மக்கள் அச்சமின்றி ஒன்றிணைந்து போராடினால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் எங்களின் போராட்டம் இத்துடன் முடிவடையாது,” என்று கூறினார்.
அவர் மேலும், NEET தேர்வு விவகாரத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தேர்வு முறையில் முழுமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த இரண்டு கோரிக்கைகளும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை CJP மற்றும் மாணவர் அமைப்புகள் வரவேற்றுள்ளன. கடந்த சில வாரங்களாக NEET-UG 2026 தேர்வு முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் விளைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், தனது ராஜினாமா கடிதத்தில் தர்மேந்திர பிரதான், மாணவர்களின் எதிர்காலம் குழப்பத்தில் சிக்கக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தார். இருப்பினும், தேர்வு முறையில் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று CJP மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
Photo credits:ANI

