நேபாளத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில் இந்தியா மேலும் இரண்டு C-130J விமானங்களில் சுமார் 21.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.
இந்த நிவாரண உதவிகளில் மருத்துவப் பொருட்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் இந்த கூடுதல் உதவி ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

