நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து காவல் வழக்குகளையும் திரும்பப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அ. ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள தகவலில், நீட் எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறும் நடைமுறை விரைவில் தொடங்கப்படும் என்றும், அதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பல ஆண்டுகளாக மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழலில், போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வழக்குகளை வாபஸ் பெறும் அரசின் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு மாணவர் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதேசமயம், வழக்குகள் திரும்பப் பெறப்படும் தேதி மற்றும் அதற்கான நிர்வாக நடைமுறைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

