சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கண்டித்து சிவகாசியில் தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...
அரசியல்

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கண்டித்து சிவகாசியில் தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...

The News Outlook
🕒 4 ஆக., 2026, 06:22 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கண்டித்து சிவகாசியில் தவெகவினர் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து சிவகாசியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து இழிவாகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், அவரது பேச்சைக் கண்டித்தும், பேசிய கருத்துகளைத் திரும்பப் பெற்று பகிரங்க மன்னிப்பு கோர வலியுறுத்தியும் சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக இப்போராட்டம் நடத்தப்பட்டது.

தவெக மாவட்ட மகளிரணி சார்பில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பி அவர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...