சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/இரண்டு வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லை! காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
அரசியல்

இரண்டு வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லை! காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

🕒 7 செப்., 2026, 07:11 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
இரண்டு வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லை! காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

AI Highlights

  • சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டி கிராமத்தில் இரண்டு வாரங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜமீன்சல்வார்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், இன்று காலிக்குடங்களுடன் சிவகாசி–கன்னிசேரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் விநியோகத்தை சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

அதிகாரிகளின் உறுதிமொழியை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔