தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது திருநெல்வேலி மாவட்டத்திற்கான முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் இந்தப் போட்டிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் அரசு ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் என்ன பல்வேறு பிரிவுகளில் நடத்தப்படுகிறது கூடைப்பந்து ( Basket ball) வாலிபால் கேரம் செஸ் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் கிரிக்கெட் என பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது பல விளையாட்டுகளில் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்பதால் அண்ணா விளையாட்டரங்கம் மாணவர்களின் கூட்டமாக காணப்படுகிறது விளையாட்டுகளில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 3000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 2000 ரூபாயும் மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் இன்று தொடங்கிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படுகிறது முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது அண்ணா விளையாட்டரங்கம் மட்டுமல்லாது வ உ சி உள்விளையாட்டு அரங்கத்திலும் போட்டிகள் நடத்தப்படுகிறது அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் இம்மாதம் முப்பதாம் தேதி நடத்தப்பட உள்ளது தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்த பிறகு நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை காண முதல் விளையாட்டுப் போட்டிகள் இது என்பது குறிப்பிடத்தக்கது
விளையாட்டு
முதலமைச்சர் கோப்பைக்கான மண்டல மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் -மாணவ மாணவிகள் பங்கேற்பு
🕒 9 செப்., 2026, 09:48 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •முதலமைச்சர் கோப்பைக்கான மண்டல மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆர்வமுடன் குவிந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
