சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிFact CheckEmergencyBloodQuizPollsMarketForumsCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/News/"6 வயது மகளின் உயிரைக் காக்க ரூ.10 லட்சம் தேவை": முதலமைச்சரிடம் கண்ணீருடன் உதவி கோரும் ஏழைத் தாய்!
News

"6 வயது மகளின் உயிரைக் காக்க ரூ.10 லட்சம் தேவை": முதலமைச்சரிடம் கண்ணீருடன் உதவி கோரும் ஏழைத் தாய்!

The News Outlook
🕒 24 ஜூலை, 2026, 12:08 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
"6 வயது மகளின் உயிரைக் காக்க ரூ.10 லட்சம் தேவை": முதலமைச்சரிடம் கண்ணீருடன் உதவி கோரும் ஏழைத் தாய்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர்: விருதுநகர் அருகே சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்த நிலையில் உயிருக்குப் போராடி வரும் 6 வயதுச் சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவக்கோரி, அவரது பெற்றோர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மத்திய சேனைப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சின்னம்மாள். இத்தம்பதியினரின் 6 வயது மகள் ஹரிணிக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகப் பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்தபோதிலும், தற்போது அச்சிறுமியின் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்துவிட்டதால், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

சிறுமியைக் காப்பாற்ற உடனடியாகச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்குச் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அன்றாடக் கூலி வேலை செய்து வரும் இத்தம்பதியினரால் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினரிடம் உதவி கோரி மனு அளித்தும், இதுவரை எவ்வித உதவியும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தங்களின் ஆறு வயது மகளைக் காப்பாற்ற முடியுமா என்ற ஏக்கத்தில் தவிக்கும் பெற்றோர், வேறு வழியின்றிப் பொதுமக்களின் நிதியுதவியை நாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அவ்வீடியோவில், "எல்லோருக்கும் அனைத்து உதவிகளையும் செய்து வரும் தமிழக முதலமைச்சர் அவர்கள், என் மகளின் உயிரைக் காப்பாற்றவும் மருத்துவ உதவி வழங்க வேண்டும்" எனச் சிறுமியின் தாய் சின்னம்மாள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...