விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெறும் மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டியில் 600- க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்! சிவகாசியில் விருதுநகர் மாவட்ட இறகு பந்துக் கழகம் சார்பாக மாநில அளவிலான 13 வயதுக்குட்பட்டோருக்கான பேட்மிட்டன் தரவரிசைப் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை 6- நாட்கள் நடைபெறும் இப்போட்டி நாக்அவுட் முறையில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை, கோவை, சேலம், திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளாக நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற உள்ளது. தரவரிசைப் பட்டியலில் அதிக புள்ளிகளை பெரும் வீரர் வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
News
சிவகாசியில் நடைபெறும் மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டியில் 600- க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்!
The News Outlook
🕒 25 ஜூலை, 2026, 06:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
