ஷென்செனில் நடைபெற்று வரும் சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார். இதன் மூலம் தொடரில் அவரது பயணம் முடிவுக்கு வந்தது.
காலிறுதியில் ஹாங்காங்கைச் சேர்ந்த லீ சியுக் இயூவை எதிர்கொண்ட ஸ்ரீகாந்த், இரு செட்களிலும் கடுமையாக போராடினார். இருப்பினும், லீ சியுக் இயூ 21-16, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
முன்னதாக, முதல் சுற்றில் சீன தைபேயின் சி யூ-ஜென்னை 21-16, 21-15 என்ற கணக்கிலும், முந்தைய சுற்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்த விக்டர் லாயை நேர் செட்களிலும் வீழ்த்தி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறியிருந்தார்.

