விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாரானாபுரம்புதூர் செல்லும் சாலையில் 56 வீட்டு காலனி பகுதியில் காளிமுத்து என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை குடோன் செயல்பட்டு வருகிறது. இன்று மூடப்பட்டிருந்த நிலையில் திடீரென குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கடை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் கரும்புகை வெளியானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அருகில் இருந்த குடியிருப்புகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்தில் குடோனில் இருந்த ஏராளமான காகித பண்டல்கள் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
News
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பழைய இரும்பு கடை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
The News Outlook
🕒 26 ஜூலை, 2026, 02:48 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

