விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் 136வது தவச உற்சவ பண்டிகை கொடியேற்றத்துடன் துவங்கியது! தென்னிந்திய திருச்சபை, மதுரை-ராமநாதபுரம் திருமண்டலத்தின் முக்கிய விழாவான 136வது தவச உற்சவ பண்டிகை சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரம் தவச உற்சவ வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகையில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சிஎஸ்ஐ தோமா ஆலயத்திலிருந்து ஏராளமான திருச்சபையினர் கையில் சிலுவை கொடியை ஏந்தியவாறு சாட்சியாபுரம் நோக்கி நடை பயணமாக வந்தனர். இவர்களை விழா நடைபெறும் வளாகத்தில் வட்டகை மன்றத் தலைவர்கள் ஜான் கமலேசன், கிதியோன் சாம் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பங்கு தந்தைகளின் சிறப்பு திருப்பலியுடன் சிலுவை கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது. சிலுவை கொடியை ஜான்சன் அசோக் குமார் ஏற்றி வைத்தார். விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
Business
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் 136வது தவச உற்சவ பண்டிகை கொடியேற்றத்துடன் துவங்கியது!
The News Outlook
🕒 10 ஜூலை, 2026, 04:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

